“தமிழ்நாட்டை குப்பைத்தொட்டியாகவும், மறுபுறம் ஏகபோகமாக வரி கறக்கும் இடமாகவும் மோடி அரசு நடத்துகிறது. மேற்குலக நாடுகள் நிராகரித்த ஈணுலை தொழிற்நுட்பத்தை தமிழரின் தலையில் கட்டுகிறது பாஜக. தமிழன் உயிரின் மீதும், தமிழ் நிலத்தின் மீதும் எவ்வித மதிப்பும் வைக்காமல் பண்ணையார்த்தனமாக நம் மீது இந்த நாசகர திட்டத்தை திணிக்கும் அதிகாரத்தை எதிர்த்து நிற்க வேண்டும்” என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.