சென்னை, நவ.26- நீட் தேர்வை போன்ற நெக்ஸ்ட் தேர்வையும் வீறுகொண்டு எதிர்ப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரி வித்துள்ளார்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர் கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-ஆவது மாநாடு மற்றும் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா கருத்தரங்கு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஞாயிறன்று (நவ.26) நடைபெற்றது. இதில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
அப்போது, உயிர்களை காப்பாற்று வது என்பது, உங்களின் தொழில் மட்டு மல்ல; சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற சேவை. அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமத்துவம் நிலவ வேண்டும். சமத்து வம் இல்லை என்றால், அது ஆரோக்கிய மான சமுதாயமாக இருக்க முடியாது. பிறப்பு மற்றும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தின் சமத்துவம் சீர்குலைந்து நோய்வாய்ப் பட்டிருந்தால், அதற்குத் தேவையான சிகிச்சைதான், சமூகநீதி”என்றார்.\மருத்துவத் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சமூக நீதிக்கு எதிரான சிந்தனைகளையும் செயல்பாடுகளை யும் எதிர்கொள்கிறோம். இந்தச் சவால்கள் அனைத்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் மருத்துவ கட்ட மைப்புகளை சிதைப்பதோடு, மருத்து வம் படித்து, மருத்துவர்களாகி சமுதா யத்திற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பாழாக்குகிறது.
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட் டிருக்கும் மருத்துவக் கட்டமைப்பு களை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழை கிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்றும் முதல மைச்சர் தெரிவித்தார்.