tamilnadu

img

பழம்பெரும் நடிகை உஷாராணி காலமானார்

சென்னை:
பிரபல நடிகை உஷாராணி சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 66.நடிகை உஷாராணி ‘பட்டிக்காட்டு பொன் னையா’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘அரங் கேற்றம்’, ‘ஜக்கம்மா’, ‘குமாஸ்தாவின் மகள்’ உள்ளிட்ட 50-க்கும்மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர்.எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயசங்கர், பிரேம் நசீர், கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இவர் நடித்திருக்கிறார். இவர் இறுதியாக தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ராஜாங்கம் படத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமில்லாது மலையாளத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் உஷாராணி நடித்துள்ளார்.

இவர் இயக்குநர் ஷங்கர் நாயரை திருமணம் செய்துகொண்டார். இத்தம் பதிக்கு விஷ்ணு என்ற ஒரு மகன் உள்ளார்.சென்னை ஆலப்பாக்கத்தில் மகன் மருமகளோடு வசித்துவந்த உஷாராணி, ஜூன் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 16ஆம் தேதி வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  ஜூன் 21 அதிகாலை 2 மணிக்கு காலமானார்.இதனையடுத்து அவரது இறுதி சடங்குகள் திங்களன்று ( ஜூன் 22) நடைபெறவுள் ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .நடிகை உஷா ராணியின் தங்கை ரஜனி, உஷா ராணியின் சொந்தங்கள் ஏராளமானவர்கள் கேரளா திருவனந்தபுரத்தில் உள்ளனர். அவர்கள் இவரது இறுதி நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழல் உள் ளது. சென்னையில் உஷாராணி, அவரது மகன் மருமகள் மட்டுமே உள்ள னர்.இந்த சூழ்நிலையில் உஷாராணி இறப்பு செய்தி குறித்து மோகன்லால், கமலஹாசனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜெயராம், பிரியதர்ஷன், கீர்த்தி சுரேஷின் தந்தை ஆகியோர் இவர்களுக்கு உதவி செய்து வருகின்றன.