tamilnadu

img

தோல் ஆலை ரசாயன கழிவுகள் நிலத்தடி நீருடன் கலப்பு

தோல் ஆலை ரசாயன கழிவுகள்  நிலத்தடி நீருடன் கலப்பு

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்

ணிப்பேட்டை, மே 24 –  ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் - 1 பகுதியில் தோல் பதனிடும் தொழிற் சாலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சிஇடிபி பின்புறம் குளத்தில் ரசாயன கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசும் அவலம். மாவட்ட நிர்வாகம் தலையிட சமூக ஆர்வ லர்கள் வேண்டுகோள். குளத்தில் மழை நீருக்கு பதிலாக அதிக ரசாயன கழிவு நீர் துர்நாற்றத்துடன் சேர்க்கப்பட்டு மழைக்காலங்களில் வழிந்து செல்கிறது. மழை நீருடன் கலந்து வரும் ரசாயன தண்ணீர் நவ்லாக் பஞ்சாயத்திற்கு  உட்பட்ட காரை, புளியங்கன்னு எரிகளில் சேந்து இறுதியாக பாலாற்றங்  கரையில் கலக்கப்படுகிறது. அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சட்ட விரோத செயல்க ளில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த நிலத்தடி நீர் நிலைகள் மாசுபடுகிறது. கால்நடைகளுக்கும், சுற்றியுள்ள மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத் துறை அதி காரிகளுக்கு தெரியபடுத்தி எந்தவித நடவடிக்கை இல்லை எனத் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா உரிய உடனடி நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.