tamilnadu

img

இலக்கணத்தை எளிதாக கற்க!

பொதுவாக இலக்க ணம் என்றால் மாணவர்கள் உள்ளத்தில் கசப்பு ணர்வு தான் இருக்கும்.

ஆனால் இந்த நூல் இலக் கணத்தை இனிப்பாக மாற்றி உள்ளது.

 இந் நூலின் கட்டுரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்புகள் மிகவும் முக்கியமானவை. “உயி ரோடு உயிர் கலந்தால்”,  “சொல் சொல் என் உயிரே”,   “இதழில்  தேனைக் குடித்து” போன்ற தலைப்பு களால் நம்மை படிக்கும் ஆர்வத்தை தூண்ட வைக்கிறது.

 தமிழ் நீண்ட வரலாறு கொண்ட மொழி.

 பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சமூகச் சூழல்க ளை தாக்குப்பிடித்து நிற்கும் மொழி தமிழ்.

 எனவே காலப்போக்கில் சில சொற்கள், பேச்சு வழக்கு மரபுகள் நிலைத்து விடுவதுண்டு.

 அவ்வாறு நிலைத்து விட்ட மரபுகள் சரியில்லை என்றால்  அவற்றை தட்டிக் கேட்டு நேர்படுத்த வேண்டியது அறிஞர்களுடைய கடமை.

 நூலாசிரியர்கள் இருவரும் செவ்வனே நிறைவேற்றி உள் ளார்கள்.

நூலாசிரியர்களின் தமிழ்ப் பற்று மிகவும் ஆழமானது.  தமிழின் தூய்மையை காக்கவும் இலக்கணம் கற்றலையும் கற்பித்தலையும் இந்நூல் எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை.

நூல் : “இனிக்கும் தமிழ்”
நூல் ஆசிரியர்கள்
மை. இராசா கிளைமாக்சு
கு.ரே.மஞ்சுளா
விலை ரூபாய் :100
வெளியீடு:
வானதி பதிப்பகம் சென்னை-600017
 தொடர்பு எண்
044 24342810