ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை பெயர் மாற்றம் செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் பொன்னேரி சார்பு நீதிமன்ற வாயிலில் வியாழனன்று (ஜூன் 27), ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.காளமேகம் தலைமை தாங்கினார்.பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன், செயலாளர் வெங்கடேஷ்வரலு, அட்வகேட் அசோசியேஷன் நிர்வாகிகள் பார்த்தசாரதி, அமரகவி, லாயர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் ரமேஷ், சுரேஷ் ஆகியோர் பேசினர்.