சின்னசேலம். டிச, 6- சின்னசேலம் நகரில் 200 ஏக்க ருக்கு மேல் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி பல பத்தாண்டுகளாக தூர்வாரப்படாமலும், வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போன தாலும் வறண்டு போய் காய்ந்து கிடக்கிறது. இதனால் சின்னசேலம் மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயி கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலைக்கு அருகே அமைந்துள்ள சின்னசேலம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் மேற்படி சின்னசேலம் ஏரி பாச னத்தை நம்பி விவசாயம் செய்து வந்த னர். இவர்களின் நலன் கருதி காம ராஜர் ஆட்சிக்காலத்தில் கல்வ ராயன்மலையின் கீழே உள்ள மாயம் பாடி, தொட்டியம், கல்படை ஆகிய சிறு ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரைத் தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக கச்சரா பாளையம் கிராம எல்லையில் கோமுகி அணை கட்டப்பட்டது. மலையிலிருந்து பாய்ந்தோடி வரும் நீரை கோமுகி அணையில் தேக்கி 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னசேலம் ஏரிக்கு கொண்டுவருவதற்காக வரத்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள் ளன. இங்கு வரும் நீர் இப்பகுதி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மிகப் பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வரத்து வாய்க்கால்கள் பல பத் தாண்டுகளாக சீரமைக்கப்படா மலும், ஏரி தூர்வாரப்படாமலும் இருப்பதால் மழைக்காலங்களில்கூட கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சின்ன சேலம் ஏரிக்கு வந்து சேர முடியாத நிலை தொடர்கிறது.
“இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பல ஆண்டு களாக மக்கள் கோரிக்கை மாநாடு கள் மூலமும், ஆர்ப்பாட்டங்கள் மூலமும் அரசுக்கும், முந்தைய விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை அளித்தும் இதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் கோடை காலங் கள் உள்பட வருடத்தின் பெரும்பா லான நாட்கள் சின்னசேலம் நக ரில் குடிநீர் பிரச்சனை நிலவி வருவ தோடு சுற்றுப்புற கிராமங்களில் விவ சாயமும் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைகிறது”. எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக சின்னசேலம் ஏரியை குடிமராமத்து பணி செய்வ தோடு கோமுகி அணையில் இருந்து சின்னசேலம் ஏரி வரை உள்ள வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் எனவும், ஒரு பகுதி முடிக்கப்பட்டுள்ள கால்வாயை முழுமையாக பணியை முடித்து சின்னசேலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் எனவும், புதிய மாவட்ட ஆட்சியர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னசேலம் வட்டச் செய லாளர் டி.மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.