குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மாங்காப் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழர்கள் சிலர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் பாடுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த தமிழர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்காக அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.