tamilnadu

திருமழிசையை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் வசிப்பவர் கிருஷ்ணன்

செவ்வாய்பேட்டை, ஏப்.10-திருமழிசையை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் வசிப்பவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி ருக்மணியம்மாள் (60). புதனன்று காலை அவர் வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்கு வந்து நின்றார். அப்போது வீட்டின் மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பி திடீரென அறுந்துருக்மணியம்மாள் மீது விழுந்தது.இதில் மின்சாரம்பாய்ந்து சம்பவ இடத்திலேயே ருக்மணியம்மாள் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;