சென்னை,பிப்.9- சிஐடியு அகில இந்திய மாநாடு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை சென்னை யில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெளிமாநில வெளிநாட்டு பிரதிநிதிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டர். 27 ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டு பேரணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டையொட்டி சென்னை நகரில் கொடி தோரணங்கள் கட்ட காவல்துறையின் உயர் அதி காரிகள் முதல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என அனைத்து தரப்பினரும் அனுமதி மறுத்தனர். அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் சிஐடியு நிர்வாகிகளை அழைத்து நீதி மன்ற உத்தரவு உள்ளதால் கொடி தோரணங்கள் கட்டக்கூடாது என்றும் மீறி கட்டினால் கழற்றி விடுவேன் என்றார், உதவி ஆய்வாளர் ஒருவர் மாநாட்டு திடலுக்கு வந்து கொடி தோரணங்கள் கட்டக்கூடாது என்று மிரட்டி னார். தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதால் துணி கொடி. துணியாலான தோரணங்களை சாலை ஓரங்களில் கட்டி நமது நகருக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை வர வேற்கிறோம் என்று கூறியும் அனுமதி மறுத்தார்கள்.தொழிற்சங்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டை விளம்பரப்படுத் துவதை காவல்துறை தடுத்து நிறுத்தியது. ஆனால், பிப்.9 அன்று சென்னை வடபழனியில் ஆற்காடு சாலை யின் நடுவில் பாஜக கொடிகள் இரும்பு கம்பிகளில் கட்டப்பட்டு பேருந்து நிலையம் முதல் ஆவிச்சி பள்ளி வரையிலும், ஏவிஎம் ஸ்டியோ எதிரில் சாலி கிராமத்தின் சாலையின் இரு பக்கத்தில் அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. இதற்கு நீதி மன்ற உத்தரவு பொருந்ததா? சென்னை காவல்துறையும் காவி பாசத்திற்கு அடிமை யாகியுள்ளதா? ஆணையர் பதிலளிப்பாரா?