tamilnadu

img

கந்த சஷ்டி கவச விவகாரம் செந்தில்வாசனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

சென்னை:
கந்த சஷ்டி கவச பாடலை இழிவுபடுத்தியதாக அளிக் கப்பட்ட புகாரில் செந்தில் வாசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்தர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.இதனைத் தொடர்ந்து செந்தில்வாசனையும், சுரேந் திரனையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.  இதையடுத்து செந்தில் வாசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால் சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்கவில்லை.

;