சென்னை, மே 17-கமல்ஹாசன் யாருடன் இருக்கிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியிருக்கிறார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மன்னார்குடி ஜீயர் அளித்துள்ள பேட்டியில் காந்தியும், கோட்சேவும் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்று இருவரையும் நேர்கோட்டில் கொண்டுவந்துள்ளார். இது சரியானதல்ல” என்றார்.தர்மனும் துரியோதனும் ஒன்றா? கிருஷ்ணனும் நரகாசுரனும் ஒன்றா? இவர்கள் எல்லோரும் இந்துதான். எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் நல்லதையும் தீயதையும் ஒன்றாக சொல்ல முடியுமா? இந்த கருத்தை ஒரு அரசியல் கட்சியோ, பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்துமகா சங்கம் போன்ற அமைப்புகள் சொல்லியிருக்கலாம், மன்னார்குடி ஜீயர் சொல்லியிருப்பது காலத்தின் கொடுமை. இதற்காக தாம் வருத்தப்படுவதாகவும் கூறினார்.ஒரு கருத்து சொல்வதற்கு மற் றொருவர் மாற்றுக் கருத்து சொல்லலாம். ஆனால் அதற்காக வன் முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறை யார் செய்தாலும் அது தவறுதான். அதிமுகவுக்கு விதிமீறல் என்பது கைவந்த கலை எனவும் தெரிவித்தார்.பாஜக அல்லாத அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறித்து காங்கிரஸ் உயர் மட்டக் குழு தான் சொல்ல வேண் டும். ஆனால் கமல்ஹாசன் தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள வேண் டும். அவர் யாருடன் இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டும். அவர் நம்மவரா இல்லை வேறு ஒருவரா என்று சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினார்.