tamilnadu

img

கள்ளக்குறிச்சி விவகாரம் – தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை சமர்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 229 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 65 போ் உயிரிழந்தனர். 150 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 8 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்து. அப்போது, கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், "கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடன் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று உடனடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டது. விஷச்சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;