சென்னை, மார்ச் 9- தமிழ்நாட்டு அரசுப் பள்ளி களில் கடந்த 8 நாட்களில் மட்டும் புதிதாக 80 மாண வர்கள் சேர்க்கை பெற் றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் வழக்கமாக மே, ஜூன் மாதங்களில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆனால், 2024-25 கல்வி யாண்டில், முன் கூட்டியே மாணவர் சேர்க்கைக்கு அரசு உத்தரவிட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர் களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மார்ச் 1 முதல் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ள னர். இதில் மார்ச் 8 வரை 80 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.
முதலிடத்தில் கள்ளக்குறிச்சி இதில், 10 ஆயிரத்து 411 மாணவர்கள் சேர்க்கை யுடன் கள்ளக்குறிச்சி மாவட் டம் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு தொடக்கப் பள்ளியில் 4 ஆயிரத்து 959 பேரும் மேல்நிலைப் பள்ளியில் 5 ஆயிரத்து 452 பேரும் சேர்ந் துள்ளனர். 3,890 மாணவர் களுடன் சேலம், 7,770 மாண வர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துளளன. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளில் மட்டும் 46 ஆயி ரத்து 586 பேரும், நடுநிலைப் பள்ளிகளில் 21 ஆயிரத்து 853 பேரும், உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆயிரத்து 287 பேரும், மேல்நிலைப் பள்ளி களில் 5 ஆயிரத்து 350 பேரும் அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
தொடர்ந்து மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூடு தல் முனைப்புடன் இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறார்.