tamilnadu

img

வடசென்னையில் கலாநிதி வீராசாமி வேட்புமனுத் தாக்கல்

சென்னை, மார்ச் 25- வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்புமனு தாக்கலின் போது நாங்கள்தான் முதலில் வந்தோம் என்று  அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெய க்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வட சென்னை மக்களவைத்  தேர்த லில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டி யிடுகிறார். அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ராயபுரத்தில் உள்ள சென்னை மாவட்ட தேர்தல் அலுவல கத்திற்கு திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகளு டன் திங்களன்று (மார்ச் 25) வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அதேபோல் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ வும் முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இருவரும் ஒரே நேரத்தில் வந்ததால் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்ற பிரச்சனை ஏற்பட்டது.

அ.தி.மு.க தரப்பில் தாங்கள்தான் முதலில் வந்தோம், அதனால் எங்களை த்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூறினார்கள். அப்போது, திமுக தரப்பில், நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக 2ஆம் எண் டோக்கன் வாங்கியிருக்கிறோம். எனவே எங்களைத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனு மதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

பின்னர் திமுகவின் மாற்று வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனைவி ஜெயந்தி கலாநிதி முதலில்  மனு தாக்கல் செய்தார். இரண்டாவ தாக அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மனு தாக்கல் செய்தார். அடுத்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர் சேகர்பாபு விளக்கம் 
இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகை யில், எங்களுக்கு 12 முதல் 12.30 மணி வரை நேரம் ஒதுக்கினார்கள், நாங்கள் 12.15 மணிக்கு நாங்கள் வந்தோம். எங்களது வரிசை எண் 2. அதிமுக வின் வரிசை எண் 7. முதலில் நாங்கள் தான் வந்தோம். பிறகுதான் அவர்கள் வந்தார்கள். ஆனால் நாங்கள்தான் (அதிமுக) வந்தோம் எனக் கூறி வேண்டுமென்றே தகராறில் ஈடு பட்டனர். தோல்வி பயத்தால் அதிமுக பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கொள்கைக்காக களத்தில் நிற்கின்றன என்றார்.

கலாநிதி வீராசாமிக்கு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜெயந்தி காலை 9 மணிக்கு டோக்கன் பெற்றுவிட்டார். முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர்தான் என்றும், அதிமுகவினர் வேண்டு மென்றே தகராறு செய்கின்றனர் என்றும் அவர் குற்றச்சாட்டினார். மேலும் முதலில் அலுவலகத்துக்குள் சென்ற வர்கள் நாங்கள்தான், நாற்காலியில் அமர்த்தவர்களும் நாங்கள்தான் என்றும் அமைச்சர் கூறினார்.

வேட்பு  மனுவின் போது எந்தவித அசம்பா விதமும் நிகழக் கூடாது என்ற அடிப்ப டையில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு மனு செய்தோம் என்று அவர் கூறினார்.

இதில் திமுக சட்டமன்ற உறுப்பி னர்கள் எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபிநேசர், ஐட்ரிம் மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், அ.விஜயகுமார், ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.