tamilnadu

img

சனாதனம் தோற்கட்டும் சமதர்மம் வெல்லட்டும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து கி.வீரமணி பேச்சு

சென்னை, ஆக. 29 -

     சனாதனம் தோற்கட்டும்; சமதர்மம் வெல்லட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்.2 அன்று சென்னையில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’  நடைபெறுகிறது. இதனை யொட்டி தமிழகம் முழுவதும் மாவட்டங்களிலிருந்து பிரச்சார சுடர் மாநாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டத்திலிருந்து தந்தை  பெரியார் சுடர் கொண்டு வரப்படுகிறது.

     இந்த சுடர்  பிரச்சாரத்தை செவ்வா யன்று (ஆக. 29) பெரியார் திடலில் இருந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். பிரச்சாரச்சுடரை சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச்  செயலாளர் ராஜசங்கீதனி டம் வழங்கினார்.

     அப்போது அவர் பேசு கையில், “சனாதான ஒழிப்பு  கருத்துக்களை இளைஞர் களிடம், மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக முற்போக்கு எழுத்தாளர், மார்க்சிய தோழர்கள் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகின்றனர். சரியான தருணத்தில் இந்த மாநாடு நடத்துவதற்கு வாழ்த்துக்கள்.

    புரட்சிகரமான சிந்த னையுள்ள இளைஞர்கள், இத்தகைய கருத்துக்களம் உருவாக்குவதற்காக மாநாட்டை நடத்துகின்றனர். நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்பு சனாதனமா?  சமதர்மமா? என எண்ணிப்  பார்க்கும் வகையில் பிரச் சாரத்தை மேற்கொண்டுள் ளனர்” என்றார்.

    “மத்திய சென்னை மாவட்டத்திலிருந்து தந்தை பெரியார் பெயரில் ஒரு நினைவுச் சுடர் கொண்டு செல்வது எங்களை போன்ற வர்களுக்கு உற்சாகம்  தருகிறது. இளைஞர்க ளோடு இளைஞர்களாக மாறுகிறோம். இந்த முயற்சி யில் வெற்றி பெறுவோம். சனாதனம் தோற்கட்டும். சமதர்மம் வெல்லட்டும்” என்றும் அவர் கூறினார்.

     இந்த நிகழ்வில் தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் நா.வே.அருள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபெருமாள், எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் சி.மிருதுளா, இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் லொ.விக்னேஷ், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்  செயலாளர் பு.பா.பிரின்ஸ்  கஜேந்திரபாபு, திராவிடர்  கழக மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.