தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றிருக்கும் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெள்ளியன்று (மார்ச் 1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.