கள்ளக்குறிச்சி,பிப். 3- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில் துறைப்பட்டு கிரா மத்தில் அம்பேத்கர் நகர் குடியி ருப்புக்குள் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாதிய அடையா ளம் பதித்த டி-ஷர்ட் அணிந்துக் கொண்டு கையில் ஆயுதங்க ளுடன் சாதி வெறி கோஷம் எழுப்பிக் கொண்டு கடந்த 18 ஆம் தேதி வன்முறை வெறி யாட்டம் நடத்தினர். தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து 50க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள், இருசக்கர வாக னங்கள், தட்டு முட்டு சாமான் கள், பாத்திரங்கள், மின்விளக் குகள் அனைத்தையும் அடித்து உடைத்து நாசப்படுத்தினர். மேலும், அதனை வீடியோ எடுத்தும் வாட்ஸ் ஆப் குழுக்க ளில் பரவ விட்டு சாதிய ரீதியாக அணித் திரட்டி தலித் மக்களை அச்சுறுத்தினர். இந்த சம்பவம் அந்தப் பகுதி யில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மூங்கில்துறைப்பட்டு பகு தியில் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். சாதிய உணர்வை தூண்டி அரசி யல் ஆதாயம் தேட முயற்சிக் கும் தீய சக்திகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கராபுரம் மும்முனை பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.சிவாஜி, பழனி ரிஷிவந்தியம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயலா ளர் டி.எம்.ஜெய்சங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆனந்தன், டி. ஏழுமலை, சுப்பிரமணியன், எம். செந்தில், எம்.கே. பழனி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். சசிகுமார், எம். சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மக்களி டம் அமைதியை ஏற்படுத்தத் தான் அரசு நிர்வாகம் இயங்குகி றது.
அரசு நிர்வாகமும் காவல் துறையும் இயங்கவில்லை என்றால் ஒரு கிராமத்தில் 10 பேர் கொண்ட சமூகவிரோத கும்பல் ஒன்றுசேர்ந்து அந்த கிரா மத்தையே அடித்து நொறுக் குவார்கள் என்பதற்கு உதார ணம்தான் மூங்கில்துறைப் பட்டு தலித் மக்கள் மீதான தாக்குதல்” என்றார். இந்த அடாவடித்தனத்தை கண்டித்துதான் செங்கொடி போராட்டம் நடத்துகிறது. இது ஒரு குறிப்பிட்ட சாதி மக்களுக் கான ஆர்ப்பாட்டம் இல்லை. எந்த சாதிக்கும் எதிரானவர்கள் இல்லை கம்யூனிஸ்டுகள். ஆனால், சாதிய ஆணவம் பிடித்த சில பேரைத்தான் கண்டிக்கிறோம். அத்தகையோர் மீது காவல்துறையும் அரசு நிர்வாக மும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என்றும் அவர் கூறினார். சாதி வெறியோடு பகிரங்க மாக தலித் மக்களை மிரட்டி வருகின்றனர். ஆனால் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருக்க வேண்டும். அங்கு என்ன நடந்தது? என விசா ரணை செய்திருக்க வேண்டும். ஆனால், இதை எதையும் செய்யாமல் அடித்தட்டு மக்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்ய தவறினால் மாநிலம் முழுவதும் போராட் டத்தை நடத்துவோம் என்றும் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.