திருவள்ளூர், பிப் 14- திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் மத்திய சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. ஆளுநர் மீது அவை உரிமை மீறல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் பதவியை வைத்து ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் தொண்டராகவே செயல்பட்டு வருகிறார். ஆளு நர்களைப் பயன்படுத்தி எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் போட்டி அரசாங்கத்தை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்திய ஜனநாயகத்திற்கு குழி பறிக்கும் செயலாக அமை யும். மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி களை மறுவரையறை செய்ய அனுமதிக்க முடியாது.
பாஜக காலூன்ற முடியாத தென் மாநிலங்களை பழிவாங்கும் நட வடிக்கையாக எம்பிக்களின் எண்ணிக்கையை குறைப்பதை எதிர்த்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த 2 தீர்மானங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்கிறது. பிரதமருக்கு விவசாயிகள், சாதாரன மக்களின் பிரச்சனை களைப் பற்றி கவலையில்லை.
எதுவும் யாருக்கும் செய்யா ததால் கோயிலைக் காட்டி மக்களை ஏமாற்ற நினைக்கிறார். நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றக் கோரியே 3 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். வாக்குறுதியை நிறைவேற்றாமல் அபுதாபி சென்றிருப்பது என்ன நியாயம்? நாளை விவசாயிகள் கிளர்ந்தெழும்போது நாட்டை விட்டு மோடி ஓடுவதற்கான முன்னோட்டமாக இந்த அபுதாபி பயணத்தை பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.