tamilnadu

img

பாசிச சக்திகளை வீழ்த்துகிற பணியை ஒன்றுபட்டு, அர்ப்பணிப்போடு செய்வோம்!

பாசிச சக்திகளை வீழ்த்துகிற  பணியில் ஒன்றுபட்டு அர்ப்பணிப் போடு செயல்படுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் நினைவேந்தல் கூட்டம்  செவ்வாயன்று (அக்.31) சென்னையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

பொதுப் பிரச்சனைகளில் தாமாக முன்வந்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியவர். ஆசிரியர் பணியை கைவிட்டு, முழுநேர ஊழியராக விசிக-விற்கு வந்தார். அவரின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிறகு முழு நேர ஊழியர் இருப்பதை விசிக-வில் தான் காண முடிகிறது. ஒருவர் ஓர் இயக்கத்தில் இருந்தால் அவருக்கு பெருமை கிடைக்கும். மாறாக, அவர் இருந்தால் அந்த இயக்கத்திற்கு பெருமை கிடைக்கிறது என்றால் அது தான் சிறப்பு. அத்தகைய சிறப்பு மிக்கவர் உஞ்சை அரசன்.

`ஹிட்லர், முசோலினி போன்ற கொடுங்கோன்மை ஆட்சி போன்ற, சவால் மிகுந்த காலத்தில் உள்ளோம்.  சிறு விபத்து நிகழ்ந்தால் கூட, இந்தியாவின் எதிர்காலம் இருண்டு விட்டது போல் உள்ளது.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள  கட்சிகள் ஒரே கொள்கை கொண்டவை அல்ல. பாசிச அபாயம்  வந்துவிடக் கூடாது; சர்வாதிகாரம் நிலைபெற்று விடக்கூடாது என்ப தற்காக ஒன்று சேர்ந்து இருக்கிறோம். மாறுபட்ட கொள்கை, சில பிரச்சனைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும் கூட, வேறுபாடுகளை கடந்து, ஒன்றிணைந்திருக்கிறோம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக-வை சேர்ந்தவர்கள் பட்டி யலின மக்களை தாக்கி, வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களையே காவல்துறை கைது செய்துள்ளது.

திமுக அரசு இருந்தாலும் கூட,  காவல்துறையினர் சாதிஆதிக்க மனோபாவத்துடன் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஒவ்வொரு வீதியி லும் சாதிய கட்டமைப்பு நிகழ்த்திக் கொண்டிருக்கும் கொடுமைகள் பட்டியலிட முடியவில்லை.

பட்டியலின மக்கள் ஓரளவு  தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது என்றால், அதற்கு காரணம் இடது சாரிகளும், விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்திருப்பதுதான். தெருக்களில் நடமாட, கோவில்களில் வழிபட, வறுமையில் வாடுகிறவர்களுக்காக போராடுகிறோம். இதன் தொடர்ச்சி யாக பாசிச சக்திகளை வீழ்த்துகிற போராட்டத்தை அர்ப்பணிப்போடு ஒன்றுபட்டு செய்வோம். உஞ்சை அரசனின் சமூகப் பணியை நிறை வேற்ற இணைந்து செயலாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி  தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி,  விசிக தலைவர் தொல்.திருமாவள வன், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார், திமுக வணிகர் அணி  செயலாளர் காசிமுத்து மாணிக்கம்,  மதிமுக பொருளாளர் மு.செந்திலதி பன் உள்ளிட்டோர் பேசினர்.