tamilnadu

img

இந்தித் திணிப்பு, நுழைவுத் தேர்வு விவகாரம் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுக!

சட்டமேதை அம்பேத்கருடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா எழுதியிருப்பது  குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “இளையராஜா சிறந்த இசைஞானி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இசைத்துறையில் அவருடன் யாரும் போட்டி போட முடியாது. ஆனால் அவர் செய்துள்ள ஒப்பீடு எந்த விதத்திலும் பொருத்தமற்றது; நேர்மையற்றது; நியாயமற்றது. ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கத்தோடு பேசி இருப்பதாகக் கருதுகிறேன்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, ஏப். 19 - இந்தித் திணிப்பு, நுழைவுத் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத் தார். “இந்திதான் இந்தியாவின் மொழி, இந்தியை இணைப்பு மொழி யாக்கும் தருணம் வந்து விட்டது. இரண்டு மாநிலங்களுக் கிடையேயான கடிதப் போக்குவரத்து அனைத்தும் இந்தியில்தான் இருக்க வேண்டும்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாபேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனிடையே மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை  ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாடு விலக்கு கோரி வரும் நிலை யில், இந்த நுழைவுத் தேர்வுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை யிலுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் அலுவல், ஆட்சி, தொடர்பு மொழியாக இருக்க  வேண்டும். இந்தியைத் திட்டமிட்டு திணிக்கும் முயற்சியைக் கைவிட  வேண்டும், மத்திய பல்கலைக்கழ கங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஏப்.19) தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அனைத்து நட வடிக்கைகளையும் ஒன்றிய பாஜக அரசு எடுத்து வருகிறது. இந்தி,  சமஸ்கிருதத்தை நாடு முழுவதும்  திணித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு முதல் இந்தியை கட்டாய பாடமாகச் சேர்க்க வற்புறுத்தி, 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். பலமொழி பேசும் நாட்டில், இந்தியைத் திணிக்கும் வேலையை செய்கின்றனர். நாடாளுமன்ற நட வடிக்கைகள், பொதுத்துறை மற்றும் அரசு நடவடிக்கைகளும் இனி இந்தி யில்தான் இருக்கும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். 43 விழுக்காடு மக்கள் இந்தியைப் பேசுவதால் இதனைச்   செய்வதாக ஒன்றிய அரசு கூறுகிறது.

இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் 26 விழுக்காட்டி னர்தான். 74 விழுக்காட்டினர் பிற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள். எனவே, இந்திதான்  ஆட்சி மொழி, அலுவல் மொழி  என்பதை இந்தியா ஏற்றுக் கொள் ளாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாததை படிப் படியாக திணிக்கின்றனர். இதற்கெதி ராக கேரளாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி வரும் நிலையில், மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை கொண்டு வருகின்றனர். இதன்மூலம் தனியார் பயிற்சி மையங்கள் (கோச்சிங் சென்டர்) லாபம் கொழிக்க வழிவகை செய்கின்றனர்.  இத னால் சாதாரண ஏழை எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங் குடியின மக்கள் பல்கலைக்கழக படிக்கட்டுகளை மிதிக்க முடியாத நிலை ஏற்படும். ஆகவே, ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு, நுழைவுத் தேர்வை எதிர்த்து முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி வலு வான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை தாங்கி னார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ. பாக்கியம், செயற்குழு உறுப்பினர் கள் க.பீம்ராவ், ம.சித்ரகலா, சைதாப் பேட்டை பகுதிச் செயலாளர் வெங்க டேஷ் உள்ளிட்டோர் பேசினர். மத்திய சென்னை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன்,  பங்கேற் றார். மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி கடலூரிலும், பெ.சண்முகம் திருச்சியிலும், மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம் புதுக்கோட்டையிலும், கே.பாலபாரதி திண்டுக்கல்லிலும், சு.வெங்கடேசன் எம்.பி., மதுரையிலும் கலந்து கொண்டனர். வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திரு வண்ணாமலை, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ண கிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,  தஞ்சை, நாகை, திருவாரூர்,  புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல்,  கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடை பெற்ற இந்தப்போராட்டத்தில் பல்லா யிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.