tamilnadu

img

கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்  

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூன் 20 அன்று சென்னை தரமணியில் 11 செ.மீ., மழையும், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் தலா 9 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளன.  

நுங்கபாக்கத்தில் 8 செ.மீ., மழையும், சோழிங்கநல்லூரில் 7 செ.மீ., மழையும், எம்ஜிஆர் நகர் மற்றும் அயனாவரம் தாலுகா அலுவலகத்தில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதுதவிர இன்னும் மற்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.  

ஜூன் 21 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 48.9 மி.மீ., மழையும், மீனம்பாக்கத்தில் 30.9 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.  

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை ஜூன் மாதத்தில் பெய்துள்ளது.  கடந்த 2016 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதத்தில் சென்னையில் பெய்த அதிகபட்ச மழையின் அளவு 53.2 ஆகும்.

23, 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.