குமுதம் ரிப்போர்ட்டர் நிருபர் கார்த்தி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர் மீதான தாக்குதலை கண்டித்து சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாயிலில் புதனன்று (மார்ச் 4) பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாரதி தமிழன், அசதுல்லா,ம.மீ.ஜாபர்,சகாயராஜ், ஆசிப் உட்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.