சென்னை,செப்.9- நகைகள், உடைகள் மற்றும் வீட்டு அலங்கார கண்காட்சி(மீனா பஜார்) சென்னையில் திங்களன்று (செப்.9) தொடங்கியது. ராயபேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி செவ்வாயன்று மாலை நிறைவு பெறுகிறது. நகைகள், உடைகள், வீட்டுக்கான உள் அலங்காரம் என இன்னும் பல உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெண்களே நடத்தும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இங்கு காட்சிப்படுத்தியுள்ளன. இந்த கண்காட்சியை திரைக்கலைஞர் ஜனனி தொடங்கி வைத்தார். சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் காஸ்மே கிளப் சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. பெண்களின் நிலை மேம்பாடு அடையா விட்டால் சமூகத்தின் நலன் உயர்வதற்கு வாய்ப்பில்லை. பெண்களை தற்சார்பு உள்ளவர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கவே கடந்த 2003-ஆம் ஆண்டு மீனாபஜார் திட்டம் தொடங்கப்பட்டது.