tamilnadu

ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் தற்கொலை

வேலூர், மே 19 - புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருபல்கலைக்கழக வகுப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டடாக்டர் தம்பதியின் மகன் உடல் ஞாயிறன்று (மே 19) வேலூர் வந்தடைந்தது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நிக்கல்தாமஸ். இவருடைய மனைவி மாயா மேரி.டாக்டர்களான இருவரும் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி வளாக குடியிருப்பில் தங்கி, தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களின் மகன் ரிஷிஜோஸ்வா (24). புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் பல்கலைக்கழக நூலக கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள, வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதைக்கண்ட மாணவர் கள் கதவை உடைத்து உடனடியாக ரிஷிஜோஸ்வாவை அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள்தெரிவித்தனர். இதையடுத்து ரிஷிஜோஸ்வாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சப்தர்ஜங்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மாணவர் ரிஷிஜோஸ்வா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும், அதனால் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. ரிஷிஜோஸ்வா தற்கொலை செய்துகொண்டது குறித்து அவரின் பெற்றோருக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இருவரும் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரிஷிஜோஸ்வாவின் உடலை பார்த்து இருவரும் கதறி அழுதனர். மாணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.ரிஷிஜோஸ்வாவின் உடல் அவரின் பெற்றோர் பணிபுரியும் மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டு, திங்கட்கிழமை வேலூர் டோல்கேட் அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது என மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;