tamilnadu

img

ஜானகியம்மாள் துளிர் இல்லம் அறிவியல் பயிற்சி முகாம்

ஜானகியம்மாள் துளிர் இல்லம்  அறிவியல் பயிற்சி முகாம்

திருவள்ளூர், மே 29- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  திரு மழிசையில் விஞ்ஞானி ஜானகி அம்மாள் துளிர் இல்லம்  சார்பாக  கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம் 6 நாட்கள் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம்,  திருமழிசை யில்  கோடைகாலத்தில் பள்ளி மாணவர்களி டம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் வகையில் அறிவியல் பயிற்சியோடு இந்த விடுமுறை  நிறை வடையவேண்டும் என்ற நோக்கத்தில் மே 20 முதல் 25 வரை  திருமழிசையில்அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆசிரியர் எஸ்.குமார் தலைமையில் இம்முகாம் நடைபெற்றது.  துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் பவுர்ணமி, 6 நாட்கள்கலந்துகொண்டு மாணவர்களை ஒருங்கிணைத்தார்.இறுதி நாளான மே 25 அன்று ஓரிகாமி (காகித மடிப்பு கலை) எளியமுறையில் கற்பது எப்படி என்ற செயல்முறையைமாவட்டதுணை செய லாளர் தேவராஜ் கற்றுக்கொடுத்தார். பயிற்சியில் கலந்து கொண்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றி தழ்களும் புத்தகமும் மாநில செயற்குழு உறுப்பினர் மோசஸ்பிரபு  வழங்கினார்.எளிய அறிவியல் சோதனைகள்,மந்திரமா, தந்திரமா, பிரபஞ்சம் உருவான கதை, மனிதகுல வரலாறு, அறிவியல் பார்வை, ஓரிகாமிஆகிய தலைப்புகளில் பயிற்சி முகாம் நடைபெற்றது.