சென்னை,ஜூன் 24- திருமணம் ஆகும் வரை மகள் களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 18 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை மாதந்தோ றும் பராமரிப்புத் தொகை தர உத் தரவிடக்கோரி குடும்பநல நீதிமன் றத்தை அணுகினார். தன்னுடைய கல்விச் செலவுகளை தானே பார்த் துக் கொள்ள முடியவில்லை என் பதை காரணம் காட்டி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் இளம்பெண் மேஜர் என்பதாலும், மனநலம் பாதித்த வரோ அல்லது உடல் ஊனமுற்ற வரோ அல்ல என்பதாலும், அவ ரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து அந்த இளம்பெண் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினார். குற்ற வியல் நடைமுறைச் சட்டம் 125 ஆவது பிரிவுடன், இந்து தத்தெ டுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத் தின் 20ஆவது பிரிவையும் இணைத்து பார்க்கும்போது, 18 வயதுக்கு மேற்பட்ட பெண் என்றா லும், திருமணமாகும் வரை மகளை பராமரிக்க வேண்டிய கடமை தந்தைக்கு இருப்பதை இளம்பெண்ணின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ஆவது பிரிவு, பிள் ளைகள் மைனராக இருக்கும் வரை மட்டுமே பராமரிப்பது பற்றி வரம்பிடுகிறது என்றாலும், மகள் களுக்கு திருமணம் ஆகும்வரை தந்தை பராமரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நீதி மன்றங்கள் தொடர்ந்து எடுத்து வந்துள்ளதை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து, குடும்ப நல நீதிமன்றத்தில் இளம்பெண் புதிதாக மனு தாக்கல் செய்யு மாறும் நீதிபதி உத்தரவிட்டார்.