tamilnadu

img

தலித் இளைஞர் பிரவீன் வெட்டிக்கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது

சென்னை, பிப்.26- நாகரிக உலகத்திற்கு ஒவ்வாத  சாதி ஆணவப் படுகொலைகளைத்  தடுத்து நிறுத்த பொதுச்சமூகம் முன்  வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர்  பிரவீன் படுகொலை செய்யப்பட் டுள்ள பின்னணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திருமணமான 4 மாதங்களில் அரங்கேறிய கொடூரம்
சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் (26) என்கிற தலித் இளைஞர்  சாதி ஆணவக் கொலை செய்யப் பட்டு இருப்பது அதிர்ச்சியும், வேத னையும் அளிக்கிறது. சாதி மறுப்பு திருமணம் புரிந்து 4 மாதங்களே ஆன நிலையில் பிரவீன் அவரது இணையரின் சகோதரன் மற்றும் நண்பர்களால் கொடூரமான முறை யில் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு வன்மை யான கண்டனத்தை தெரிவித்துக்  கொள்வதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அவர்களுக்கு பின்  புலமாக இருந்தவர்கள் அனை வருக்கும் உரிய தண்டனையைப் பெற்றுத்தர காவல்துறை முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

திட்டமிட்டு ஊட்டப்படும் சாதியப் பெருமித உணர்வு
தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திரு மண தம்பதியர்களின் உயிர் பறிப்பு கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.  சாதிப் பெருமித உணர்வு திட்டமிட்டு  சாதி ஆதிக்க சக்திகளால் வளர்க்  கப்படுவதும், ‘சாதி கடந்து திரு மணம் செய்ய மாட்டோம்’ என்று  உறுதிமொழி ஏற்கிற நிகழ்ச்சிகள்  நடத்தப்படுவதும், கல்லூரியில் பயி லும் பெண்கள், காதல் வயப்பட்டு சாதிய கட்டுகளை மீறி திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கார ணத்தால் முன் கூட்டியே- படிக்கிற  காலத்திலேயே திருமணம் முடித்து  விடுவதுமான போக்குகள் ஏற்பட் டுள்ளன. பெற்றோர், ஊராரின் நிர்ப்  பந்தத்திற்கு ஆளாவதும் அதன் கார ணமாக சொந்த மகன், மகளையே  கூட எரிப்பதும், தாக்கிக் கொலை  செய்வதுமான உளவியல் நிர்ப்பந் தங்களுக்கு ஆளாகின்றனர்.

சாதிய வன்மங்களால் தலைகுனியும் தமிழ்மண் 
இத்தகைய நிலைமை நாகரீக  சமுகத்தின் மீதான பெருங்கறையா கும். இத்தகைய சாதிய வன்மம் வளர்வதென்பது ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் உறவுகளின் நெருக்கத்தை, நிம்மதியைக் கெடுத்து விடுகிறது என்பது கவ லைக்குரியது. சமூக சீர்திருத்த சிந்த னைகளின் விளைநிலமாக, முன் னோடியாக திகழ்கிற தமிழ்மண் உலகின் முன் தலைகுனிந்து நிற்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் சமூ கத்திற்கு திறந்த மனதுடன் ஒரு  வேண்டுகோளை முன் வைக்கிறது.  இத்தகைய சாதிய வன்மங்களுக்கு  எதிராக கருத்துக்கள் எழ வேண்டும். சாதி ஆணவக் கொலைகள் தடுத்து  நிறுத்தப்படுகிற சூழலை உரு வாக்க வேண்டும். 

பாதுகாப்பு இல்லங்களை அரசு ஏற்படுத்த வேண்டும்!
ஆணவக்கொலைகளில் ஈடு படுவோர்கள் உரிய தண்டனை பெற வழக்கு விசாரணையை குறு கிய காலத்திற்குள் முடித்திட வேண்  டும். சமூகத்தில் நிலவும் சாதிய  உணர்வுகளை துடைத்தெறிந்திடும் வகையில் சாதி ஒழிப்பு பிரச்சார இயக்கத்தை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். உச்ச  நீதிமன்றம் சக்தி வாகினி வழக்கில்  அளித்த தீர்ப்பின்படி, அனைத்து சாதி மறுப்புத் திருமண தம்பதி களுக்கு ‘பாதுகாப்பு இல்லங் களை’ ஏற்படுத்தி உரிய பாது காப்பை வழங்கிட வேண்டுமென் றும் வேண்டுகோள் விடுக்கிறது.

‘திருமணம் என்பது வயது வந்த  இளைஞர்களின் தெரிவு- உரிமை’ என்ற உயரிய எண்ணத்தை இச் சமூகத்தில் உருவாக்க அனைத்து ஜனநாயக, முற்போக்கு எண்ணம்  கொண்டவர்களுக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.