கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் கையாள்வது அவசியம்
சென்னை, அக்.13- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இன்று நிதித் துறையின் மையத்திற்கே நுழைந்து, சேவைகளை வடிவமைக்கும், வழங்கும் மற்றும் அனுபவிக்கும் விதத்தையே மாற்றி வருகிறது என தேசிய கட்டண நிறுவனம் (என்பிசிஐ)-யின் நிர்வாகத் தலைவர் அஜய் குமார் சௌதரி தெரிவித்தார். மும்பையில் நடைபெற்ற ஆறாவது உலக நிதி தொழில்நுட்ப விழா 2025-இல் “ஏஐ யின் வாக்குறுதி மற்றும் அபாயம்: அனைவர் நிதிக்காக பொறுப்பான நுண்ணறிவை உருவாக்குவது” என்ற தலைப்பில் அவர் சிறப்பு உரையாற்றினார். ஏஐ வழங்கவுள்ள வாய்ப்புகள் அளவற்றவை, ஆனால் அவை பொறுப்புடன் நிர்வகிக்கப்படாவிட்டால் நிதி அமைப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். வங்கி, காப்பீடு, முதலீடு மற்றும் கட்டண துறைகளில் ஏஐ முதலீடு 2027க்குள் அமெரிக்க டாலர் 100 பில்லியன் ஆகும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது 78 விழுக்காடு நிதி நிறுவனங்கள் குறைந்தது ஒரு துறையில் ஏஐ யை பயன்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு மோசடி கண்டறிதல், ஒழுங்கு பின்பற்றல், வர்த்தக துல்லியம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.