ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்து அந்த மாநிலத்தை துண்டாடிய ஒன்றிய மோடி அரசின் அரசியல் சட்ட விரோத நடவடிக்கை க்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் செல்லும் என்று அந்த தீர்ப்பு குறிப்பிடுகிறது.
இந்த தீர்ப்பு நமது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது கடுமையான தாக்கங்களை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. கூட்டாட்சி அமைப்பு முறைக்கு மாறாக, “தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்து, “தேசிய ஒருங்கிணைப்பு” என்ற பெயரில் ஓர் ஒற்றை அதிகார அரசு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கே இந்தத் தீர்ப்பு இட்டுச் செல்லும்.