இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் கவுன்ட்டவுன் முதல் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார்.
கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஜூலை 30-ல் சிங்கப்பூர் செயற்கைகோள்களை ஏந்தி சென்ற பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட் , சந்திரயான்-3 கவுண்டனுக்குக் குரல் கொடுத்துள்ளார். 2012-இல் விண்ணில் ஏவப்பட்ட RISAT-1 திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் என்று பலராலும் பாராட்டப் பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.