tamilnadu

இன்று விண்ணில் பாய்கிறது இன்சாட்- 3டிஎஸ்

சென்னை,பிப்.16- வானிலை மற்றும் பேரிடர் எச்ச ரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி. எப்-14 ராக்கெட் மூலம் பிப்.17 அன்று விண்ணு க்கு  அனுப்புகிறது இஸ்ரோ. இதற்கான கவுண்ட் டவுன் பிப்.16 அன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

வானிலை மற்றும் பேரிடர் எச்ச ரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டிஎஸ்’ விண்ணில் அனுப்பப் பட உள்ளது. சென்னை அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் பிப்.17 மாலை  5 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணி முடிந்துள்ளது. இந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளது.  

இந்த செயற்கைக்கோளில் முக்கிய ஆய்வு கருவிகள் உள்ளன. குறிப்பாக இமேஜர்(, சவுண்டர் , டேட்டோரிலே டிரான்ஸ்பாண்டர் செயற்கைக்கோள் உதவியுடன் தேடல் மற்றும் மீட்பு டிராண்பாண்டர் என  4 முக்கிய கருவிகள் உள்ளன. இதில் இமேஜர் கருவி என்பது 6 வகை யான அலைநீளங்கள் பூமியின் போட்டோக்களை எடுத்து வழங்கும்.

இதன்மூலம் வளிமண்டலத்தில் உள்ள  ஈரப்பதத்தின் அளவை கணக்கீடு செய்ய முடியும். ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்வையிட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி  https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில்  ஏராளமானவர்கள் முன் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.