சென்னை, ஜூன் 8 - கல்விக்கட்டணம் செலுத்த வலியுறுத்தி பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பள்ளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை தற்போது வாங்க கூடாது என்றும் மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று தனியார் பள்ளி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்ட ணம் கேட்டு தகவல் அனுப்புவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டை யன், கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு தகவல் அனுப்பிய கோவையைச் சேர்ந்த ஒரு பள்ளி, சென்னை யில் உள்ள 3 பள்ளிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. கட்டணம் கேட்கும் பள்ளிகள் பற்றி புகார் கொடுத்தால் அந்தப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.