tamilnadu

குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, டிச.9 - மழை, வெள்ளம் பாதித்த பகுதி கள் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்க ளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு உறுதி செய்யப்பட்டி ருக்கிறது. 

எனவே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள் வது அவசியம். அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி யுள்ளார்.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட கோதா மேடு பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சனிக்கிழமையன்று (டிச.9)ஆய்வு செய்தார். 

பின்னர், இது குறித்து செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முழுவதிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் 3000 இடங்க ளில் தற்போது தொடங்கி வைக்கப் பட்டிருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ  முகாம்கள் சென்னையில் 500  இடங்களில் முடிவு செய்யப்பட்டி ருந்தது. ஆனால் தற்போது 679 இடங்க ளில் கூடுதலாக நடைபெற்று வருகிறது. 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகப்படியான மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டிருந்தன. இதில்  சென்னை மாவட்டத்தில் 679 இடங்களி லும், திருவள்ளூர் மாவட்டத்தில் 200 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 இடங்களிலும், காஞ்சி புரம் மாவட்டத்தில் 100 இடங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங் களில் 2000 என்கிற வகையில் மொத்தம் 3000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த மருத்துவ முகாம்கள் மழைக்கால நோய்கள் என்று சொல்லப்படுகின்ற மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, வயிற்றுப் போக்கு, சேற்றுப்புண், தொண்டை வலி, இருமல் போன்ற பல்வேறு உபாதைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சென்னை, பொது சுகாதாரம்  மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பப் பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 160 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மருத்துவக்குழுவினர் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்க ளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. எனவே மழை வெள்ளம்  பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.