tamilnadu

img

கடன் கட்டாத சரவணா ஸ்டோர்ஸ் கடையை ஜப்தி செய்த இந்தியன் வங்கி

இந்தியன் வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன் தொகையை திருப்பி செலுத்த வில்லை என கூறி பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை மற்றும்  சரவணா தங்கநகை மாளிகை கட்டிடத்தை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வருகிறது பிரைம் சரவணா ஸ்டோர். இந்த நிறுவனம் இந்தியன் வங்கிக்கு செலுத்தவேண்டிய ரூ.120 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி ஜப்தி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

;