tamilnadu

img

இந்தியன் ஆயில் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையில் இன்று துவக்கம்

சென்னை, ஆக.21- இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 ஆம் ஆண்டிற்கான தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்குகிறது.

 செப்டம்பர் 7 ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அத்லீட் கோவா  சேலஞ்சர்ஸ் அணியை அறிமுக அணியான ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி எதிர்கொள் கிறது. மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி  வீராங்கனைகளான மணிகா பத்ரா, பெர்னா டெட் சேக்ஸ் ஆகியோர் விளையாடு கிறார்கள். இந்த ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் டேபிள் டென்னிஸ் வளர்ச்சிக்கு குறிப்பிட தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய நட்சத்திர வீரர் சத்யன் ஞான சேகரன், கடந்த தொடரில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சன் யிங்ஷாவை வீழ்த்திய அய்ஹிகா முகர்ஜி போன்ற வீரர்கள் இந்த தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வர்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியை வழி நடத்தும் சரத்  கமல், தனது சொந்த ஊருக்கும், கேலரியை களை நிரப்பும் உணர்ச்சிகரமான ரசிகர் களையும் மகிழ்விக்க இளம் வீரர்களுடன் இணைந்து சாம்பியன் பட்டத்திற்கு போட்டி யிட தயாராக உள்ளார். எனவே, இந்த தொடரிலும் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது.