tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

மரக்கன்று நடு விழா

ஜூன் 1 அன்று ‘ஓட்டுநர்கள் தின’மாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில்  சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின், வேளச்சேரி பகுதி, டைடல் பார்க் நிறுத்தம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கவுரவத் தலைவர் எஸ்.முகமது ரஃபி, பகுதி துணைச்செயலாளர் திருநாமம், நிறுத்த தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓட்டுநர் தின கொண்டாட்டம்…

அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஜூன் 1 ஆம் தேதியை ‘ஓட்டுநர்கள் தின’மாக கடைபிடித்து வருகிறது. இதனையொட்டி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டம், எழும்பூர், டாக்டர் ஏ.பி.அப்துல் கலாம் சுற்றுலா வாகன நிறுத்தத்தில் ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்டத் துணைச் செயலாளர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேசன், பொருளாளர் எம்.முரளி, துணைச் செயலாளர் ஆர். ராஜ்மோகன், நிறுத்தச் செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உறுதி மொழி ஏற்பு

வாகன ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று (ஜூன்1)சென்னை பெருநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் வி.குப்புசாமி,  கவுரவ தலைவர் ஏ.ராயப்பன், நிர்வாகிகள் ஜெ.சேவியர், டில்லி (எ) நாகராஜன், சிதம்பரம், ஆர்.சந்தானம், ராகவன், எஸ்.ரவி, டி.சந்திரசேகர், வி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.

போதை பழக்கத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு சனிக்கிழமையன்று (மே 31) பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றிபெற்ற அணிக்கு சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் வழங்கினார். மாவட்டத் தலைவர் ஜெ.பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் லோ.விக்னேஷ், ஆ. பிரியதர்ஷினி எம்.சி, மாநிலக்குழு உறுப்பினர்  நந்தினி, செயற்குழு உறுப்பினர்கள் யூஜின்பர்க், மணிகண்டன், அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தோழர் பி.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழர் பி.கிருஷ்ணமூர்த்தி (79) உடல்நலக் குறைவால் சனிக்கிழமையன்று (மே 31) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, நிர்வாகிகள் பி.கிருஷ்ணன், மணிநாத், இளங்கோ, அசோக், இருதயராஜ், பா.தேவி, கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

போர் வேண்டாம்! அமைதி வேண்டும்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்தக்கோரி ஜூன் 1 அன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டம் சார்பில் பெசன்ட்நகர் கடற்கரையில் போரினால் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விளக்கி பதாகை வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, மாநிலக்குழு உறுப்பினர் அ.ஜானகிதேவி, நிர்வாகி எம்.குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிலம்பத்தில் முதல் பரிசு: மாணவிக்கு பாராட்டு

சிஐடியு ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஆர்.கபாலியின் பேத்தி சிவன்யா லயன்ஸ் மார்ஷல் ஆர்ட்ஸ் சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம்  போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார். அவருக்கு, மத்திய சென்னை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக பாராட்டப்பட்டது. இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட பொருளாளர் விக்னேஷ், இந்திய மாணவர் சங்க  மாவட்ட தலைவர் மிருதுளா, செயலாளர் தமிழ், வாலிபர் சங்க சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர் பாபு, பொருளாளர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.