1.திண்டுக்கல் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் சிறப்புக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் திங்களன்று நடைபெற்றது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் பேசினார்.
2.மதுரை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பணிகளில் ஈடுபடுவதற்கான மார்க்சிஸ்ட் கட்சியின் சிறப்புப் பேரவைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதையொட்டி வருகை தந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை, அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தமது ஆதரவையும், சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். உடன் பி.சம்பத் உள்ளிட்டோர்.