சென்னை, ஆக.21- காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 - 16-ஆம் நிதியாண்டில் முட்டுக்கா ட்டில் 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 1 கோடியே 35 லட்சம் ரூபாயை வருமான வரிக்கணக்கில் காட்ட வில்லை என கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவை யில் இருந்த இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்ப ட்டது. அதற்கு எதிராக கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்குப் பதிவு செய்யும்போது மனுதாரர் எம்.பி.யாக இல்லை என அவர்கள் தரப்பில் வாதிட ப்பட்டது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வருமான வரி வழக்கை அமர்வு நீதி மன்றமான சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றியது தவறு என்று தெரிவிக்க ப்பட்டது. வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றவும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. தலைமைப் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்யும் வரை விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, ஆகஸ்ட் 30-க்குள் தமிழக அரசு, வருமான வரித்துறை, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டார்.