சென்னை,நவ.3- சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயி களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட் டுள்ளது என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கரும்பு சாகுபடி பரப்பையும் உற்பத்தியையும் அதிகரிப்பதற்காக, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரை கட்டுமானமும் தரக் கூடிய கரும்பு ரகங்களை பிரபலப்படுத்துவது, கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்குதல் ஆகியவை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு, நலிவடைந்து வரும் சர்க்கரை ஆலைகளில் புனர மைப்பு, எத்தனால் உற்பத்தி திட்டம், இணைய மின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாக சர்க்கரை ஆலைகளின் திறன் மேம்படுத்தப் பட்டு இருக்கிறது.
சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு
கரும்பு விவசாயிகள் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-21 அரவை பருவத்தில் 95,000 எக்டராக இருந்த கரும்பு பதிவு, 2022-23 அரவைப் பருவத்தில் 1,50,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 160.54 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித் துள்ளது.
மேலும் சர்க்கரை கட்டுமானம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2022-23 அரவைப் பருவத்தில் 9.27 விழுக்காடு உயர்ந்துள்ளது. கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை யாக ரூ.195 முதல்வரின் ஆணையின் படி வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், 2023-24 -ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில், 2022-23 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
ஒன்றிய அரசு 2022-23 -ஆம் அரவைப் பருவத்திற்கு அறிவித் துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2821.25 -யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடி நிதியை மாநில நிதியிலிருந்து வேளாண்மை துறை வழங்கி ஆணையிட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.3016.25 அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத் துறை, 14 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலை களுக்கு 2022-23 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாய மான மற்றும் ஆதாய விலையான ரூ.2821.25 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.195 -யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2022-23 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகள் விபரம் சேகரிக்கப்பட்டு சர்க்கரைத் துறை ஆணையரகம் கூர்ந்தாய்வு செய்யப் பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின் படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் நலனுக்காக ரூ.253.70 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை யினால் சுமார் 1.42 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.