tamilnadu

ஊக்க ஊதிய உயர்வு ரத்தை திரும்பபெறுக: ஆசிரியர் சங்கம்...

சென்னை:
50 ஆண்டுகாலமாக வழங்கப்பட்டு வரும் ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வது ரத்து, அகவிலைப்படி ரத்து என போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது உயர் கல்விக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வையும் ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.அரசு, அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி தரவில்லை, அரசு உயர் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு  நான்கு ஆண்டுகாலமாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வு வழங்காமல் உள்ளனர்.2004 முதல் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தை ரத்து செய்துள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும் அல்லது பட்டதாரியாக உட்படுத்தி இருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளுக்கான முழு கல்வித் தகுதியுடன் உள்ளனர்.எனவே, இதனை கருத்தில் கொண்டு அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.