tamilnadu

img

திருவண்ணாமலை புத்தக கண்காட்சி துவங்கியது

திருவண்ணாமலை,அக்.11- திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வா கம், பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் இணைந்து நடத்தும் 3 ஆவது  புத்தக திரு விழாவின் துவக்க விழா வெள்ளி யன்று(அக்.11) காலை 11 மணிக்கு வேங்கிக்  கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் இல.நடராஜன் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.சு. கந்தாமி கண்காட்சியை திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார்.  முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெ. அன்பழகன் வரவேற்றார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் வெ.ஜெயக்குமார் கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர் சி. மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார். புத்தக கண்காட்சி ஆண்டாள் சிங்கார வேலு திருமண மண்டபத்தில் அக்.11 முதல்  20 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறு கிறது. இந்த புத்தக கண்காட்சி திருவிழாவில்,   எஸ். ஆர். ஜி. டி. எஸ் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

;