tamilnadu

img

சமூக நலக்கூடம்-விளையாட்டு அரங்கு திறப்பு

சென்னை, மார்ச் 5 - சென்னை அடையாறு, கோடம் பாக்கம் மண்டலங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அடையாறு மண்டலம், 169வது வார்டுக்கு உட்பட்ட ஜோதியம்மாள் நகரில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தையும், ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்குக் கட்டிடத்தையும் அவர் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சின்னமலை, வெங்கடாபுரம் பகுதியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ1.50 கோடி மதிப்பில் புதிதாக கட்ட ப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற் கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.கோடம்பாக்கம் மண்டலம், 139வது  வார்டு மேற்கு மாம்பலம், அண்ணா மலை நகர், 3வது தெருவில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.35.45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் படவுள்ள அங்கன்வாடி மையக் கட்ட டத்திற்கான அடிக்கலையும் அமைச்சர் நாட்டினார்.

ஜாபர்கான்பேட்டை, ஆர்.ஆர்.காலனி, 3வது தெருவில் மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், 37 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கேரம் மற்றும் சதுரங்க விளையாட்டு அரங்கத்தை உள்ளடக்கிய பன் னோக்குக் கட்டடத்திற்கான பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மேயர் ஆர்.பிரியா, முனைவர் தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி.,  துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் ஆர்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ப.சுப்பிரமணி, எம்.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.