ராணிப்பேட்டை, டிச. 31- ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, நெமிலி ஊராட்சி ஒன்றியங்களில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகம் கட்டிடம் சனியன்று (டிச. 30) மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்.
இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஸ்வரி, சத்தியநாதன், வடிவேலு, துணைத் தலைவர்கள் ஸ்ரீமதி நந்தகுமார், தீனதயாளன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் காந்திமதி பாண்டுரங்கன், கால்நடை துறை உதவி இயக்குநர் மரு. பூங்குழலி (பொறுப்பு) பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் திரிபுரசுந்தரி, மோகன், வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சரண்ராஜ், முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுமதி, ஆனந்தி, கால்நடை மருத்துவர்கள் மரு. ஹரிஹரன், மரு. ராஜேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் கட்டடத்தையும், நெமிலி ஊராட்சி ஒன்றியம் நாகவேடு ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.