tamilnadu

img

வியாசர்பாடியில் மின்சாரம் தாக்கி உதவிப் பணியாளர் பலி

சென்னை,செப்.21- சென்னை வடக்கு பகுதி வியாசர்பாடி கோட்டம் மாத்தூர் பிரிவில் பணிபுரி யும் மின் களப்பணி உதவியா ளர் எம்.முருகன் பணி யாற்றி வந்தார். இவர் வியா சர்பாடியில் சனிக்கிழமை யன்று (செப்.21)  மின்மாற்றி யில் (டிரான்ஸ்பார்மர்) ஏறி பழுதுபார்த்துக் கொண்டி ருந்தார். அப்போது,  எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்தம் காரண மாக விபத்து ஏற்பட்டு,  முருகன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரி ழந்தார். அவருக்கு வயது 39. மின்வாரியத்தில் தமிழ கம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணி செய்ய இடத்தில் தற்போது 80 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். களப்பணி யில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் தொகை பெருக்கம் புதிய மின் இணைப்புக்கள் என பல்கி பெருகிவரும் இச்சூழலில் மின் ஊழியர்கள் பணிச்சுமை யில் அவதிப்படும் அவல நிலை உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதி இல்லாதது, போதிய ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மனிதனின் உன்னதமான உயிர்கள் மின்வாரியத்தின் மெத்தனத்தால் பலியாவது சர்வசாதாரணமாக மாறி விட்டது. மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் முருகன் பணிசெய்து கொண்டிருக்கும் போது இன்வேட்டரிலிருந்து 11 ஆயிரம் ஓல்ட் மின்சாரம் தாக்கி உரைந்த நிலையில் உயிரிந்தார். மின்சார வாரிய உயர்அதிகாரிகளின் மெத்தனமன்றி வேறென்ன என்று தொழிலாளர்கள் ஆவேசத்துடன் கூறு கின்றனர். விபத்தில் உயிரிந்த முருகனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வேலை மற்றும் குழந்தை களின் உயர்கல்வியை உத்திரவாதப்படுத்த வேண்டும் என தொழிலா ளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  வியாசர்பாடி சி.கல்யாண புரம் 3வது தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட களப்பணியாளர் முருகனின் உடலுக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி கள்,  தலைவர்கள், உடன் பணியாற்றும் தொழி லாளர்கள் திரளாக இறுதி மரியாதை செலுத்தினர். மூல கொத்தளத்தில் உள்ள மயானத்தில் ஞாயிறன்று (செப்.22) நல்லடக்கம் செய்யப்படுகிறது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் உறுப்பினரான முருகனுக்கு அம்மு(32) என்ற மனைவியும், ஹாசினி (12), ஷமிஷா(5) என்ற  இரண்டு மகள்கள் உள்ள னர்.