திமுக தலைமையிலான ‘இந்தி யா’ கூட்டணி சார்பில் திண்டுக் கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதா னந்தம் சனிக்கிழமை ரெட்டியார் சத்திரம் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பலக்கனூத்து ஊராட்சி செம்ம டைப்பட்டியில் மக்கள் வெள்ளத்தில் அமைச்சர் பெரியசாமி, வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் வாக்குச் சேக ரித்தனர்.
சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதா னந்தத்தின் சொந்த ஊரான கட்டச் சின்னான்பட்டியில் ஆர்.எஸ்.கவிதா தலைமையில் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கேந்திர வித்யாலயா பள்ளி கட்ட நடவடிக்கை
முத்தனம்பட்டியில் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் பேசுகையில், “அமைச்சர் ஐ.பெரியசாமி ஒவ்வொரு குடும்பத்தையும் தன்னுடைய குடும்பமாக நினைக்கிறார். சாதி, மத பாகுபாடில்லாமல் அனைவரிடம் அன்பாக பழகி வருகிறார்.
நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக புதுச்சத்திரம் ஊரில் உள்ள கடைகள், வீடுகளை அகற்றா மல் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி, பாலம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தற்போது வேலை நடந்து கொண்டிருக்கிறது.
என்னை வெற்றி பெறச் செய்தால் கொடைக்கானல்-மூணாறு இணைப்புச் சாலை, திண்டுக்கல்-காரைக்குடி ரயில்வே திட்டம், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கேந்திர வித்யாலயா பள்ளி கட்ட நடவ டிக்கை, காந்திகிராம பல்கலைக் கழகத்தில் க்யூட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல திட்டங்களை அமைச்ச ரிடம் கலந்து ஆலோசித்து நிறை வேற்றுவேன்’’ என்றார்.