திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில்...
இந்தியா கூட்டணி சார்பில் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சனிக்கிழமையன்று (மார்ச் 23) காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சிறு குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா,இ.கருணாநிதி,இ.சுந்தர்,மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன்,தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவீரர்களுக்கு வீரவணக்கம்
விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் சனிக்கிழமைன்று (மார்ச் 23) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக ஆயிரம் விளக்கு பகுதி புஷ்பா நகரில் உள்ள பகத்சிங் உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பகுதி குழு உறுப்பினர்கள் பி. ஏழுமலை, பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீம்ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறைந்த ஒளியிலும் துல்லியமான வீடியோ
சென்னை, மார்ச் 22- அதிவேக செயல்திறன் மற்றும் அதிநவீன தொழி ல்நுட்பத்துடன் கூடிய ஐக்யூஓஓ நிறுவனத்தின் நியோ 9 புரோ விற்பனை க்கு வந்துள்ளது.
சிறப்பு சலுகையாக ஐசிஐசிஐ கடன் அட்டை களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு சலுகையும் அல்லது 4 ஆயிரம் ரூபாய் வரை எக்சேஞ்ச் போனசும் வழங்கப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கார்டுடன் 50 எம்.பி கொண்ட குறைந்த ஒளியிலும் புகைப்படம்,வீடியோ எடுக்க உதவும் அதிநவீன சோனி கேமரா ஆகிய வற்றைக் கொண்டுள்ளது.