tamilnadu

திரையரங்குகளில் இன்று காலை, மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து

சென்னை, ஏப்.17-மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் வியாழனன்று(ஏப்.18) காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வியாழனன்று (ஏப். 18) தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், ஏப்.19 அன்று அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள் ளது. இதேபோல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. 

;