சென்னை, ஜூலை 8- நீட் தேர்விலிருந்து தமிழ கத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற இரண்டு மசோ தாக்களை மத்திய அரசு நிராக ரித்தது குறித்து தமிழக சட்டப் பேரவையில் திங்களன்று (ஜூலை 8) கேள்வி நேரம் முடிந்த தும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “தமிழக சட்டப் பேரவையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு குடி யரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 மசோதாக்களும் கடந்த 27 மாத காலமாக உறங்கிக் கொண்டி ருந்தது. இவ்வளவு நாட்களாக மவுனம் சாதித்து வந்த மத்திய பாஜக அரசு, அந்த இரண்டு மசோதாக்களையும் நிராகரித்து விட்டது. இதனை உயர்நீதிமன் றத்தில் திடீரென அறிவித்தது தமி ழக மக்களுக்கு பேரதிர்ச்சி யாகும். இதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைத்த பாஜக அரசு, சட்டப்பேர வையின் ஆணி வேரை அசைத் துப் பார்த்துள்ளது. மத்திய அர சின் இச்செயலை மாநில அரசு கண்டிக்க வேண்டும். நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாக் களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து இந்த கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண் டும்” என்றார்.
மத்திய அரசை கண்டிக்க வேண்டாம்
இதற்கு விளக்கமளித்த முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் “ நீட் மசோ தாக்களை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து சட்டமன்றத் தில் தீர்மானம் கொண்டு வர முடி யாது” என்றனர். மீண்டும் பேசிய ஸ்டாலின், இன்றைய பிரதமர் குஜராத் மாநிலத்தின் முதல மைச்சராக இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தவர்தான் என்றும் மத்திய அரசைக் கண்டித்து தீர்மா னம் வேண்டாம் என்றால், மத்திய அரசை வலியுறுத்தியாவது தீர்மா னம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட முதல மைச்சர், நீட் விவகாரத்தில் நீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்டவல்லு நர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்”என்றார்.
மோடி பெயரை குறிப்பிட அச்சம்
முன்னதாக பதிலளித்த சுகா தாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்,“தமிழகத்தில் ஜெய லலிதா முதலமைச்சராக இருந்த போது பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படை யில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடைபெற்றதையும் அந்த கொள்கையிலிருந்து விலக வில்லை என்றும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் இந்த அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். “நீட் தேர்வில் இருந்து தமி ழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அதை நிராகரித்த மத்திய பாஜக அரசையோ பிரத மர் மோடி பெயரையோ தப்பித் தவறிக்கூட குறிப்பிடவில்லை”.
பதில் அளிக்காத மத்திய அரசு
சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், மத்திய அரசுக்கு நாம் அனுப்பி வைத்த இரண்டு மசோதாக்களையும் நிறுத்தி வைத்திருப்பதாக சட்டத் துறைக்கு ஒரு கடிதம் வந்தது. ஏன் நிறுத்தப்பட்டது? எதற்காக என்று விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்திற்கு இதுவரைக்கும் பதில் வரவில்லை. ஆனால், உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிற்காக மின்னஞ்சல் மூலம் ஒரு தகவல் மத்திய அரசிடமி ருந்து கிடைத்ததாகவும் அதில், நீட் தேர்வு குறித்த இரண்டு மசோ தாக்களையும் நிராகரித்து விட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டி ருந்த ஆங்கில வார்த்தையை நான் படித்து பார்த்தபோது நிறுத்தி வைப்பு என்றுதான் உள்ளது. ஆனால், எப்படி அதை நிராகரித் தார்கள் என்று தெரியவில்லை. எனவே, இது குறித்தும் கடிதம் எழுத உள்ளோம். நாம் அனுப்பிய மசோதாவில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்து மீண்டும் தீர்மானம் கொண்டுவர நமது சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே மத்திய அரசை மீண்டும் வலியுறுத்த தேவையில்லை என்றார்.