தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 3 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர் , ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.